என் காதல்
முன்னொரு நாள்
நீ நடந்த தெருவில் உன் எதிர்திசையில்
என்னை நடக்க வைத்தது
என் காதல்!!
பின்வரும் நாட்களில்
உன் ஒரு நிமிட தரிசனம் கிட்டும் அத்தெருவில்
பொழுது முழுதும்
கடக்க வைத்தது
என் காதல்!!
என்றாவது நீ
கடந்து செல்கையில்
உன் கண்
என்னை பார்ப்பது போல்
ஏற்படும் பிரம்மைக்கே
அதே தான்! அதே தான்! என
அசடு வழிந்தது
என் காதல்!!
காற்றில் முகம் மீது
படரும் இரண்டு
கொத்து முடியை
நீ ஒதுக்கி கொண்டு
உதட்டோரம் மெல்லிய பொன்நகை
வெளிச்சம் சிந்தினாய்
அன்று கூட இளையராஜாவின்
வயலின் சத்தம்
போட்டு வெறுப்பேத்தியது
என் காதல்!!
என் பெயரை தன் பெயரின் பாதியாய் சுமக்க போகும் பெண் பெயர் அறிய
பின் தொடர சொன்னது
என் காதல்!!
நல்ல வேலை உன் கல்லூரியில்
என் நண்பன் படிக்க
அவனுக்கு படி அளந்து
கண்டறிந்த உன் பெயரை
பச்சை குத்திக்கொண்டது நெஞ்சோடு
என் காதல்!!
உன் கண் பார்த்தாலே எனக்கு வரும்
விழி பிதுங்கள்
மொழி பதுங்களுக்கெல்லாம்
முடிவு கட்ட இன்றே செல் என்றது
என் காதல்!!
மாலை வரை
கல்லூரி வாசலில்
காத்திருந்து ; பின் தொடர்ந்து
கை தட்டி கூப்பிட்டால் திரும்பி பார்ப்பாள்
என நினைத்த உன்னை
ஏமாற்றி நகரந்து கொண்டே இருக்கிறாள் பார் என்றது
என் காதல்!!
உடனே மெதுவாக
வேகம் எடுத்த கால்கள்
சற்றும் தடுமாற்றத்தை
வெளிக்காட்டாமல்
உன்னை நோக்கி
நகர்ந்து
ஐந்து அடி இடைவெளியில் நின்று
"ஏங்க உங்களத்தான்" வெட்கம் கலந்த
பயத்துடன் உரக்க சொன்னது
என் காதல்!!
நீ திரும்பி விட்டாய்..
நான் அதை விரும்பி விட்டேன்..
உன் கண்கள் என்னை
மிரட்டும் ரீதியில் நோக்க..
நான் மண்ணை நோக்கி விட்டேன்..
சற்று சுதாரித்து ஆண்களுக்கான மிடுக்கை நிலைநிறுத்த
நிமிரசொன்னது
என் காதல்!!
"இந்தாங்க நாலு வருசமா கொடுக்க நெனச்சது,இன்னிதான் நிறைவேறிச்சு"னு சூடான பிரியாணி பொட்டலம்
கிடைத்த ராபிச்சை போல
இளித்து கொண்டே தந்தேன்..
முகமெல்லாம் பல் என்றது
என் காதல்!!
வெறுப்பாக வாங்கிக்கொண்டு சிறு தூரம் நடந்தாள் நானும் திரும்பி நடக்கலானேன்..
சில்லறைகள் சிதறும்
அதே சத்தம்..
இளையராஜா வயலின் கதறல்..
திரும்பி பார்த்தால்..
"பிரித்த கடிதத்துடன் பிரியா சிரிக்கிறாள்.."
என்றது
என் காதல்!!
நீ நடந்த தெருவில் உன் எதிர்திசையில்
என்னை நடக்க வைத்தது
என் காதல்!!
பின்வரும் நாட்களில்
உன் ஒரு நிமிட தரிசனம் கிட்டும் அத்தெருவில்
பொழுது முழுதும்
கடக்க வைத்தது
என் காதல்!!
என்றாவது நீ
கடந்து செல்கையில்
உன் கண்
என்னை பார்ப்பது போல்
ஏற்படும் பிரம்மைக்கே
அதே தான்! அதே தான்! என
அசடு வழிந்தது
என் காதல்!!
காற்றில் முகம் மீது
படரும் இரண்டு
கொத்து முடியை
நீ ஒதுக்கி கொண்டு
உதட்டோரம் மெல்லிய பொன்நகை
வெளிச்சம் சிந்தினாய்
அன்று கூட இளையராஜாவின்
வயலின் சத்தம்
போட்டு வெறுப்பேத்தியது
என் காதல்!!
என் பெயரை தன் பெயரின் பாதியாய் சுமக்க போகும் பெண் பெயர் அறிய
பின் தொடர சொன்னது
என் காதல்!!
நல்ல வேலை உன் கல்லூரியில்
என் நண்பன் படிக்க
அவனுக்கு படி அளந்து
கண்டறிந்த உன் பெயரை
பச்சை குத்திக்கொண்டது நெஞ்சோடு
என் காதல்!!
உன் கண் பார்த்தாலே எனக்கு வரும்
விழி பிதுங்கள்
மொழி பதுங்களுக்கெல்லாம்
முடிவு கட்ட இன்றே செல் என்றது
என் காதல்!!
மாலை வரை
கல்லூரி வாசலில்
காத்திருந்து ; பின் தொடர்ந்து
கை தட்டி கூப்பிட்டால் திரும்பி பார்ப்பாள்
என நினைத்த உன்னை
ஏமாற்றி நகரந்து கொண்டே இருக்கிறாள் பார் என்றது
என் காதல்!!
உடனே மெதுவாக
வேகம் எடுத்த கால்கள்
சற்றும் தடுமாற்றத்தை
வெளிக்காட்டாமல்
உன்னை நோக்கி
நகர்ந்து
ஐந்து அடி இடைவெளியில் நின்று
"ஏங்க உங்களத்தான்" வெட்கம் கலந்த
பயத்துடன் உரக்க சொன்னது
என் காதல்!!
நீ திரும்பி விட்டாய்..
நான் அதை விரும்பி விட்டேன்..
உன் கண்கள் என்னை
மிரட்டும் ரீதியில் நோக்க..
நான் மண்ணை நோக்கி விட்டேன்..
சற்று சுதாரித்து ஆண்களுக்கான மிடுக்கை நிலைநிறுத்த
நிமிரசொன்னது
என் காதல்!!
"இந்தாங்க நாலு வருசமா கொடுக்க நெனச்சது,இன்னிதான் நிறைவேறிச்சு"னு சூடான பிரியாணி பொட்டலம்
கிடைத்த ராபிச்சை போல
இளித்து கொண்டே தந்தேன்..
முகமெல்லாம் பல் என்றது
என் காதல்!!
வெறுப்பாக வாங்கிக்கொண்டு சிறு தூரம் நடந்தாள் நானும் திரும்பி நடக்கலானேன்..
சில்லறைகள் சிதறும்
அதே சத்தம்..
இளையராஜா வயலின் கதறல்..
திரும்பி பார்த்தால்..
"பிரித்த கடிதத்துடன் பிரியா சிரிக்கிறாள்.."
என்றது
என் காதல்!!
0 comments: