எது மழை..!!







தன் ஏரிகளையும் குளங்களையும் அழித்து விட்டார்களே என கோபம் கொள்ளும் இயற்கையின் கதறலா ‪#‎மழை‬



இல்லை



அழிந்து வரும் விவசாயத்தையும் விவசாயிகளின் நிலையையும் எண்ணி சோகமுற்று இயற்கை சிந்தும் கண்ணிரா
#மழை


இல்லை


ஊழல் செய்து மேடு பள்ளமா போட்ட சாலையின் மீது மோகம் கொண்டு இயற்கை செய்யும் சுய இன்பமா
#மழை



இல்லை



மாணவர்களை சந்தோஷப்படுத்த விடுமுறை அளித்து அவர்களின் புண்ணகையை கண்டு இயற்கை தரும் முத்தமா
#மழை



இல்லை



மரம் இல்லாமல் நிற்க நிழல் கூட இல்லாமல் சூரிய கதிர்கள் பட்டு இயற்கை சிந்தும் வியர்வையா
#மழை



சொல்.. இதில் எதுவடா மழை

1 comments:

என் காதல்

என் காதல்







முன்னொரு நாள்
நீ நடந்த தெருவில் உன் எதிர்திசையில்
என்னை நடக்க வைத்தது
என் காதல்!!


பின்வரும் நாட்களில்
உன் ஒரு நிமிட தரிசனம் கிட்டும் அத்தெருவில்
பொழுது முழுதும்
கடக்க வைத்தது
என் காதல்!!


என்றாவது நீ
கடந்து செல்கையில்
உன் கண்
என்னை பார்ப்பது போல்
ஏற்படும் பிரம்மைக்கே
அதே தான்! அதே தான்! என
அசடு வழிந்தது
என் காதல்!!


காற்றில் முகம் மீது
படரும் இரண்டு
கொத்து முடியை
நீ ஒதுக்கி கொண்டு
உதட்டோரம் மெல்லிய பொன்நகை
வெளிச்சம் சிந்தினாய்
அன்று கூட இளையராஜாவின்
வயலின் சத்தம்
போட்டு வெறுப்பேத்தியது
என் காதல்!!


என் பெயரை தன் பெயரின் பாதியாய் சுமக்க போகும் பெண் பெயர் அறிய
பின் தொடர சொன்னது
என் காதல்!!


நல்ல வேலை உன் கல்லூரியில்
என் நண்பன் படிக்க
அவனுக்கு படி அளந்து
கண்டறிந்த உன் பெயரை
பச்சை குத்திக்கொண்டது நெஞ்சோடு
என் காதல்!!


உன் கண் பார்த்தாலே எனக்கு வரும்
விழி பிதுங்கள்
மொழி பதுங்களுக்கெல்லாம்
முடிவு கட்ட இன்றே செல் என்றது
என் காதல்!!


மாலை வரை
கல்லூரி வாசலில்
காத்திருந்து ; பின் தொடர்ந்து
கை தட்டி கூப்பிட்டால் திரும்பி பார்ப்பாள்
என நினைத்த உன்னை
ஏமாற்றி நகரந்து கொண்டே இருக்கிறாள் பார் என்றது
என் காதல்!!



உடனே மெதுவாக
வேகம் எடுத்த கால்கள்
சற்றும் தடுமாற்றத்தை
வெளிக்காட்டாமல்
உன்னை நோக்கி
நகர்ந்து
ஐந்து அடி இடைவெளியில் நின்று
"ஏங்க உங்களத்தான்" வெட்கம் கலந்த
பயத்துடன் உரக்க சொன்னது
என் காதல்!!


நீ திரும்பி விட்டாய்..
நான் அதை விரும்பி விட்டேன்..
உன் கண்கள் என்னை
மிரட்டும் ரீதியில் நோக்க..
நான் மண்ணை நோக்கி விட்டேன்..
சற்று சுதாரித்து ஆண்களுக்கான மிடுக்கை நிலைநிறுத்த
நிமிரசொன்னது
என் காதல்!!


"இந்தாங்க நாலு வருசமா கொடுக்க நெனச்சது,இன்னிதான் நிறைவேறிச்சு"னு சூடான பிரியாணி பொட்டலம்
கிடைத்த ராபிச்சை போல
இளித்து கொண்டே தந்தேன்..
முகமெல்லாம் பல் என்றது
என் காதல்!!


வெறுப்பாக வாங்கிக்கொண்டு சிறு தூரம் நடந்தாள் நானும் திரும்பி நடக்கலானேன்..
சில்லறைகள் சிதறும்
அதே சத்தம்..
இளையராஜா வயலின் கதறல்..
திரும்பி பார்த்தால்..


"பிரித்த கடிதத்துடன் பிரியா சிரிக்கிறாள்.."
என்றது
என் காதல்!! 

0 comments:

உங்களை மெர்சல் ஆக்கும் காதல் ஹைக்கூ - Tamil Kadhal hykoos for your lovable persons


காதலித்து பார் ஹார்ட் (heart) பிட்டும் அனிருத் பாட்டாய் கேக்கும்...!




1) வெயில் பட்டு கருத்த நீர்விழ்ச்சி அவள் கூந்தள்...!!


2) இரண்டடி திருக்குரள் அவள் இதழ்கள்..!!


3) மனச திருடிய உன்னை மாட்டி விட எதாச்சும் காதல் நிலையம் இருக்கா என்ன...!!






4 ) உன் கண் பார்வை ; என் காதல் குளிருக்கு போர்வை..!!

5) நீ வெறுத்த கனம் ; நான் உயிரில்லா பிணம்..!!

6) உன்னை பார்த்த நேரம் ; தித்திக்கிரது காரம்..!!



7) என் காதல் வளர நான் விதைத்த விதை - என் கவிதை..!!
அதற்கு நான் உற்றிய தண்ணிர் - என் கண்ணிர்..!!
வளர்ந்த செடி தோல்வியின் அடையாளமான என் தாடி..!!


8) உன்ன பத்தி கவிதை எழுத தெர்யாது
ஆனா
உன்ன பத்தி எழுதுனாலே அது கவிதைனு மட்டும் தெர்யும்..!!

9) என் வானத்தில் நிலவாய் நிற்பாய் என நினைத்து கொண்டிருக்கும்போதே நகர்ந்து சென்றாயடி மேகமாய்...!!



10) அளவுக்கு அதிகமாக காதலித்து விட்டமோ என வருந்தினேன் உன் சிறு இதயத்தில் அது நுழையாத போது..!!

11) எதுகை மோனைக்கு கூட இடம் தராமல் நிரம்பி வழிகிரது காதல் என் கவிதைகளில்...!!

12) சின்ன கொசுவுக்கு கூட ரத்த தானம் செய்யும் வள்ளல் நீ எனக்கு இதய தானம் செய்ய மறுப்பதேனோ...!



13) உங்க அப்பா அம்மா பெயர் என்ன copper(cu), tellurium(te) ஆ ரெண்டும் சேர்ந்த கலவையா நீ(cute) வந்துள்ளாயே...!!

14) உன் கண் பார்வையில் தோட்டாவாய் தெறிக்குதடி என் இதயம்..!!

15) உன் பெயரில் உள்ள எழுத்துக்களெல்லாம் போராட ஆரமித்து விட்டது தங்களுக்கு காதல் எழுத்துக்கள் என்னும் அங்கிகாரம் கேட்டு..!



16) பெண்ணே நீ பியுட்டிபுல் உன்ன பார்த்ததுல இருந்து நான் பேட்டரிபுல் ..!

17) சென்னை கூவத்துக்கு நடுவே நீ மினரல் வாட்டர்....!!!

18) உன் 4g பார்வையில் கரையும் Data நானடி..!!

2 comments: